தஞ்சாவூர், ஆக.19 – சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதாக, பொய்யாக விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கை நடத்திய நிலையில், ஒன்றரை ஆண்டாக அங்கீகாரம் பெறாமல் மாண வர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கிய தனியார் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். தஞ்சாவூர், மாதாக்கோட்டை சாலை யில், கமலா சுப்பிரமணியம் மெட்ரிக்குலே ஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 2022– 2023-ஆம் கல்வி யாண்டில், சி.பி.எஸ்.இ., பாடப் பிரிவுகளில் 11 ஆம் வகுப்பில், 18 மாணவர்களை சேர்ந்துள் ளனர். இந்தக் கல்வியாண்டில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாணவர்கள் தயா ரான நிலையில், சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பள்ளிக்கு இல்லை. பொய்யாக விளம்பரப் படுத்தி மாணவர்களை சேர்ந்துள்ளது பெற் றோர்களுக்கு தெரிய வந்தது. இதற்கிடை யில், 18 மாணவர்களை மற்றொரு தனியார் பள்ளியில் தனியாக வைத்து வகுப்புகளை நடத்தி வந்துள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பெற் றோர்கள் கேட்ட போது, கடந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ., ஆங்கீகாரம் பெற முயற்சி செய்து வருகிறோம். இதுவரை கிடைக்க வில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் அங்கீ காரம் கிடைத்து விடும்” எனக் கூறியுள்ள னர். இதனால் கோபமடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு, கடந்த ஒன்றரை ஆண்டாக எங்களின் பிள்ளைகளின் கல்வி வீணாகி விட்டது எனக் கூறிப் போராட்டம் நடத்தினர். பின்னர், ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர். இது குறித்து பெற்றோர்கள் கூறியதா வது:- கடந்த ஜூன் மாதம் எங்கள் பிள்ளை களை, வேறு தனியார் பள்ளியில் வைத்து வகுப்புகளை எடுத்துள்ளனர். 11-ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு போல ஏமாற்றும் விதமாக நடத்தியுள்ளனர். தற்போது 12-ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். பிள்ளைகளின் படிப்பு ஒன்றரை ஆண்டு வீணாகி விட்டது. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறாமல், எங்களை ஏமாற்றி மோசடி செய்து விட்டனர். சி.பி.எஸ்.இ., என பள்ளி முகப்பில் எழுதி இருந்ததைத் தற்போது பெயிண்ட் வைத்து அழித்து விட்டனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் கட்டணத்தையும் வாங்கிக் கொண்டு, எங்கள் பிள்ளைகளின் வாழ்வில் விளையா டிய பள்ளி நிர்வாகம் மீது, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.