திருநெல்வேலி, மார்ச் 2- நெல்லை தாலுகா சத்திரம் குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிட் பாட்டில் வெடித்து கண்பார்வை பாதிக்கப்பட்ட மாண விக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். சத்திரம் குடியிருப்பு அரசு உயர் நிலைப்பள்ளி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 1 அன்று நெல்லையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்இ இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேரன்மகாதேவி தாலுகா வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலை மையாசிரியர் லீலா நவ்ரோஜ் மற்றும் ஆசிரி யர் சுந்தர், உதவியாளர் சங்கரலிங்கம் ஆகி யோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நெல்லை டவுன் வாகையடி முக்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துமாரி, வாலி பர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சாம் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினார். மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.கற்பகம், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சைலேஷ் அருள் , மாதர் சங்க மாவட்டக்குழு உறுப்பி னர்கள் விஜயலட்சுமி ,ஜெயந்தி, சிபிஎம் நெல்லை தாலுகா செயலாளர் டி.நாராய ணன், வாலிபர் சங்க ராஜா ஆகியோர் பேசி னர். ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க நிர்வாகி கள் ராமலட்சுமி ,ஆனந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.