திருச்சிராப்பள்ளி, மார்ச் 11 - புதுச்சேரியில் 9 வயது சிறுமி வன்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளி களை தூக்கிலிட வலியுறுத்தி யும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் இணைந்து திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க காட்டூர் பகுதிச் செயலாளர் சந்தோஷ், காட்டூர் பகுதி துணைச் செய லாளர் சுபாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். வாலி பர் சங்க திருச்சி மாநகர மாவட்டத் தலைவர் லெனின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரேணுகா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பொன்மகள், மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, பகுதி செயலாளர் மலர், எலிசபெத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வாலிபர் சங்க திருச்சி மாவட்ட துணைச் செயலா ளர் யுவராஜ், பகுதி குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.