நாகப்பட்டினம், நவ.5- நூறு நாள் பணியாளர்களுக்கு நான்கு மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதை கண்டித்தும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “பண்டிகை பஜார்” என்ற தலைப்பில் பார்ப்பதற்கு நிஜ பலகாரங்கள் போல தோற்றமளிக்கும் மண்ணால் செய்த பலகாரங்களை காட்சிக்கு வைத்து ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நூதன ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் கே.டி.எம்.சுஜாதா தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி மாவட்டப் பொருளாளர் எஸ்.சுபாதேவி பேசினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சி.மாலா, எஸ்.அகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கெட்டி உருண்டை, முறுக்கு, வடை, அதிரசம், மைசூர் பாகு போன்ற பலகாரங்களை மண்ணால் செய்து காட்சிப்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.