தஞ்சாவூர், டிச.4- நுண்கடன் நிதி நிறுவனங்கள் பிடியில் சிக்கி தவிக்கும் பெண் களை காப்பாற்ற வேண்டும் என வலி யுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் இ.வசந்தி தலைமையில், மாநிலக் குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வி, மாவட்ட நிர்வாகி கள் வனரோஜா, புனிதா, ஜெனிஃ பர் ஆகியோர் திங்களன்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்-ஐ நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர். அம்மனுவில், “நுண் நிதி நிறுவ னங்களின் அபரிமிதமான வளர்ச்சி யால் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு அதிகரித்து வரும் துன்புறுத்தல் மற்றும் முன்னெப் போதும் இல்லாத கடன் சுமைக்கு வழிவகுத்துள்ளது. லாப நோக்கத்துடன் செயல் படும் நுண் நிதி நிறுவனங்களின் அபரிமிதமான வளர்ச்சி, 85 சத வீதத்திற்கும் மேற்பட்ட பெண்களை கடன் பொறிகளுக்குள் தள்ளி, அவர்களின் சேமிப்புகளை ஆபத் தில் ஆழ்த்துகிறது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாமை ஆகி யவை பெண்களின் துயரத்தை மேலும் அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான பெண்கள் கடன் சுழலில் சிக்கியுள்ளனர். நுண் நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பெண்களை தற்கொலைக்குத் தள்ளுகின்றன. நுண் நிதி நிறுவன முகவர்களின் இந்த துன்புறுத் தலைத் தடுக்க ஒழுங்குமுறை செயல்பாடு உடனே தேவைப்படு கிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஒன்றிய அரசாங்கத்தின் வங்கித் துறையை தனியார் மயமாக்கு வதற்கான முயற்சியில், சிறு நிதித் துறை தாராளமயமாக்கப் பட்டுள்ளது. பொதுத்துறை மற்றும் கூட்டு றவு வங்கிகளிடமிருந்து 8-11 சதவீத வட்டிக்கு பெறக்கூடிய கடன்களு டன் ஒப்பிடும்போது, நுண்கடன் நிறு வனங்களில் 22-26 சதவீதம் அதிக வட்டி கட்டும் நிலையை ஏற்ப டுத்துகிறது.
இந்த கடன்களை வசூலிக்கும் போது, பெண்களுக்கு மேலும் துன்பத்தை உண்டாக்கும். எனவே, தனியார் கடன் வழங் குபவர்களுக்கு அதிகபட்சமாக 12 சதவீத எளிய வட்டி என வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இருப் பினும், ரிசர்வ் வங்கி பொதுத்துறை வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு 4 சதவீதம் (அரசு மானியத்துடன்) முதல் 9 சதவீதம் வரை முன்னுரிமை துறை கடன ளிப்பு விகிதத்தில் நுண் நிதி கடன் களை தாராளமாக வழங்க அறி வுறுத்த வேண்டும். சுய உதவிக் குழுக்களுக்கு ஆண்டுக்கு 4 சதவீத வட்டி விகி தத்தில் கடன்கள் வழங்கப்பட வேண் டும். கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் வேலையின்மை யால் ஏற்படும் தற்போதைய பொரு ளாதார நெருக்கடியின் விளை வாக, பெண் சுய உதவிக்குழுக்கள் (வங்கி அல்லாத நிதி நிறுவனம்) மற்றும் நுண்நிதி வங்கிகளுக்கு தற் போதுள்ள நிலுவைத் தொகைக் கான வட்டி முழுமையாக தள்ளு படி செய்யப்பட வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கும் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து, 30 சதவீத கடன்களை நேரடியாக மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்க வேண்டும். நுண் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப் படும் 10 லட்சம் ரூபாய் வரை யிலான பிணை இல்லாத கடன்க ளில் குறைந்தபட்சம் 30 சதவீத கடன்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்களால் ஏற்படும் துன்புறுத்தல் சம்பந்தப் பட்ட வழக்குகளைப் பெறவும், அவற்றை தீர்ப்பதற்கும், அனைத்து மாநில, மாவட்ட மையங்களிலும் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.