திண்டுக்கல், டிச.2- மதரசாவிற்கு வரும் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இஸ்லா மிய மதபோதகரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் புகார் கொடுக்கப்பட்டது. சாணார்பட்டி ஒன்றியம் திம்மணநல்லூர் ஊராட்சி யில் உள்ள பாறைப்பட்டி பகு தியில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மதரசாவில் 80 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும் மதபோதகர் ராஜாமுகமது என்பவர் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இஸ்லா மிய மக்கள் ஜமாத்தில் புகார் கொடுத்துள்ள நிலை யில் மதபோதகர் தலைமறை வாகியுள்ளார். தலைமறை வான மதபோதகர் ராஜா முகமதுவை கைது செய்ய வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் பெற்றோர்க ளின் சார்பில் வெள்ளியன்று மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் கொடுத்துள் ்ளனர். மேலும் மதரசா மாணவி கள் கடந்த 3 நாட்களாக பயத்தில் உள்ளனர். அவர்க ளது மன உலைச்சலை போக்கும் வகையில் அக் குழந்தைகளுக்கு கவுன்சி லிங் கொடுக்க வேண்டும் என்று மாதர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மனுக் கொடுக்கும் நிகழ்ச்சியின் போது, சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஜி.ராணி, மாவட்டச் செயலா ளர் பாப்பாத்தி, மாவட்டத் தலைவர் சுமதி, நிர்வாகிகள் ஆர்.வனஜா, பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.