திருச்சிராப்பள்ளி, நவ,2- ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், 100 நாள் வேலை சம்பளப் பாக் கியை வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும், காவிரி நீர் இல் லாததால் விவசாயம் பாதித்த விவசாயி களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண் டும், வாழை விவசாயிகளுக்கு இலவச இடுபொருள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் லால்குடி ஒன்றி யக்குழு சார்பில் லால்குடி தாலுகா அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு லால்குடி ஒன்றிய செயலாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், சிஐடியு புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜ் ஆகியோர் பேசினர். முசிறியில் ஒன்றியசெயலாளர் டி.பி. நல்லுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாலக்குழு உறுப்பினா் ஸ்ரீதர் உரையாற்றினார். உப்பிலியபுரத்தில் ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.