districts

img

குறுவைப் பயிர் ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரணம் வழங்குக!

நாகப்பட்டினம், அக்.6 - குறுவை சாகுபடிக்கு நிவாரணம் வழங்கக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத் தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜூன் 12 காவிரியில் தண்ணீர் திறந்து விட்டதை அடுத்து, டெல்டா மாவட்ட விவ சாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்த னர். இந்நிலையில் தொடர்ந்து காவிரி யில் தண்ணீர் வராததாலும், மழை  பொய்த்துப் போனதாலும், பயிரிடப்பட்ட விவசாய நெற்பயிர்கள் கருகிவிட்டன, இதனால் விவசாய பெருங்குடி மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாயினர்.  இதனால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 நிவாரண வழங்க வேண்டியும், பயிர் காப்பீட்டை அரசை ஏற்று நடத்த வேண்டியும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகப் பட்டினம் மாவட்டம் முழுவதும் வெள்ளி யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, கீழ்வேளூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் ஆர்.முத்தையன், வடக்கு  ஒன்றியச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  திருக்குவளை வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்தில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரு மான நாகைமாலி, கீழையூர் மேற்கு  ஒன்றியச் செயலாளர் டி.வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் எம்.அப்துல் அஜீஸ், தலைஞாயிறு ஒன்றியச்  செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் உரை யாற்றினர். நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், ப.சுபாஷ் சந்திர போஸ், நாகை தெற்கு ஒன்றியச் செய லாளர் ஏ.வடிவேல், வடக்கு ஒன்றியச் செய லாளர் வி.வி.ராஜா, நாகை நகர செயலா ளர் க.வெங்கடேசன், திருமருகல் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஸ்டாலின்  பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  வேதாரண்யம் கோட்டாட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு வேதாரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பிகாபதி தலைமை வகித்தார். நாகை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கோவை.சுப்பிரமணியன், ஏ.வேணு, வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றியழகன், தலைஞாயிறு ஒன்றியக் குழு உறுப்பினர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கோரிக்கை களை வலியுறுத்திப் பேசினர்.