பெரம்பலூர், பிப்.17 - பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் ஜன.20 முதல் மார்ச் 9 வரை வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மார்க்சிய தொடர் பயிற்சி வகுப்பு பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை (பிப்.17) அன்று நடை பெற்ற 5 ஆவது வார பயிற்சி வகுப்பிற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.அகஸ் டின் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஜி.செல்வி வரவேற்றார். ‘இந்திய தொழிலாளர் இயக்க வரலாற்றில் கம்யூ னிஸ்டுகள்’ என்ற தலைப்பில் முன்னாள் எம்எல்ஏ-வும் சிஐடியு மாநில துணைத் தலை வருமான எஸ்.கே.மகேந்திரன் சிறப்புரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டத் தலைவர் அ.ரெங்கநாதன் நன்றி கூறினார்.