ஜூலை 26 -
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் மருங்காபுரி வட்டத்தில் உள்ள அடித்தட்டு மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், போக்குவரத்து, மயானச்சாலை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலாளர் தியாகராசன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சிதம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.