கரூர், ஏப்.26-
கரூர் மாவட்டம், குளித் தலை வட்டம், மருதூர் பேரூ ராட்சிக்குட்பட்ட விஸ்வநாத புரம் சுப்பன் ஆசாரி களத் திற்கு செல்வதற்கு சாலை, தெருவிளக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என வலியுறுத்தி மருதூர் பேரூ ராட்சி அலுவலகத்தில் மக் கள் குடியேறினர்.
போராட்டத்தின் அவசி யம் குறித்து மக்கள் கூறிய தாவது:-
விஸ்வநாதபுரம் சுப்பன் ஆசாரி களத்திற்கு செல்வ தற்கு சாலை, தெரு விளக்கு வசதிகள் இல்லாததால் மக் கள், பள்ளி கல்லூரி செல் லும் மாணவ மாணவிகள் கர்ப்பிணிகள் பெரும் துய ரத்தை சந்தித்து வருகின்ற னர். சாலை வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர், குளித் தலை வட்டாட்சியர், மருதூர் பேரூராட்சி உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் பல முறை கோரிக்கை மனு வழங்கிவிட்டோம். கோரிக் கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி பலகட்ட போராட்டங் கள் நடத்திவிட்டோம். எங்க ளது கோரிக்கைகளை அலட்சியப்படுத்துகின்ற னர்.
மக்களை அலட்சியப் படுத்தும் மாவட்ட நிர்வா கத்தைக் கண்டித்தும் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விஸ்வநாதபுரம் கிளைச் குழந்தைவேல் தலைமை யில் குடியேறி உள்ளோம் என்றனர். போராட்டத்தில் பங் கேற்ற கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. ராஜூ, குளித்தலை ஒன்றி யச் செயலாளர் இரா.முத் துச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினர் இளங்கோவன் ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் பேசினர்.
இருப்பினும் மருதூர் பேரூராட்சி நிர்வாகம் சாலை அமைக்க முடியாது என்று பிடிவாதமாக இருந்தது. மாலை வரை போராட்டம் நீடித்தது. இதற்கிடையில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழ னன்று முற்றுகையிடப் போவதாக கட்சியின் குளித் தலை ஒன்றிய செயலாளர் இரா.முத்துச்செல்வன் தெரிவித்தார்.