districts

img

வெண்மணி தியாகிகள் நினைவு தின கொடியேற்றம்

திருச்சிராப்பள்ளி, டிச.26 - வெண்மணி தியாகிகள் நினைவு  தின கொடியேற்றம் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதி களில் நடைபெற்றது.  சிபிஎம் திருச்சி மலைக்கோட்டை பகுதி குழு சார்பில் தாராநல்லூர், கீரைக்கடை மற்றும் அண்ணாநகரில் கட்சி கிளைகள் சார்பிலும், கல்மந்தை  காலனியில் கட்சியின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிளை,  பூக்கொல்லையில் வேஸ்ட் பேப்பர் கட்சி கிளை, காந்தி மார்க்கெட்டில் தக்காளி கமிஷன் மண்டி சங்கம் சார்பில் கொடியேற்றப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மலைக்கோட்டை பகுதி குழு செயலாளர் ராமர் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினர். இதில் கிளை செயலாளர் ரமேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த ரெட்டவயல் கடைத்தெருவில், கீழ்வெண்மணி  தியாகிகளின் 53 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. தமிழக மக்கள்  விடுதலை இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். சிபிஐ சார்பில் ராஜமாணிக்கம், சித்திரவேல், காயா ம்பூ ஆகியோரும் சிபிஎம் சார்பில் வீ. கருப்பையா, தமிழக மக்கள் புரட்சிக் கழகம் சார்பில் வீரக்குடி ராசா, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மணக்காடு குணசேகரன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வீ.கருப்பையா தலைமையில், மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. விவசாயிகள் சங்க ஒன்றிய துணைத் தலைவர் நீலகண்டன், நடராஜன், மணக்காடு அருள் பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  பூதலூர் தெற்கு ஒன்றியம், பூத லூர், தாலுகா அலுவலகம் என இரு இடங்களில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், மூத்த தோழர் முகமது சுல்தான் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.  தியாகிகளுக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. 

கும்பகோணம்

கட்சியின் கும்பகோணம் நகர அலுவலகத்தில் மாதர் சங்க பொறுப் பாளர் அறிவு ராணி தலைமையில் செங்கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செங்கொடியை சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலா ளர் சின்னை.பாண்டியன் ஏற்றினார். சிஐடியு மாவட்ட பொருளாளர் கண்ணன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் மணிமா றன், ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை  தலைவர் அன்புமணி, சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரியலூர்

கீழவெண்மணியில் உயிர் நீத்த  தியாகிகள் தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீன்சுருட்டி, உட்கோட்டை மற்றும் தா.பழூரில் கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே தா.பழூர் கடைவீதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் கொடி ஏற்றி வீரவணக்கம்  செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கொடியேற்றி பேசினார்.  ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உட்கோட்டை பகுதி கிளைகளின் நான்கு இடத்திலும், மீன்சுருட்டி பகுதியில் 6 இடங்களில் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலை மையில், மாவட்ட செயலாளர் இளங் கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அம்பிகா, ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.குமார், வாலிபர் சங்கம் ரவீந்தர் முன்னிலையில் கொடி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. மாவட் டம் முழுவதும் அனைத்து கிளைகளி லும் செங்கொடி ஏற்றப்பட்டு தியாகி களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட் டது. திருவாரூர் மாவட்ட அலுவலக மான தோழர் பி.ராமமூர்த்தி நினைவ கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்  ஜி.சுந்தரமூர்த்தி கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், ஒன்றிய, நகர செயலாளர்கள் என்.இடும்பையன், என்.தர்மலிங்கம், மாணவர் சங்க  மாவட்ட செயலாளர் இரா.ஹரி சுர்ஜித், அலுவலக செயலாளர் எஸ். ராமசாமி மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். வெண்மணி  தியாகிகளின் நினைவு புகைப்படங் களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.