பேராவூரணி, மே 20-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தாய் புடோகான் ஸ்போர்ட்ஸ் கராத்தே மற்றும் தாய் தமிழர் பாரம்பரிய சிலம்பக் கழகம் சார்பில் ஒரு நாள் சிறப்பு தற்காப்புக் கலை பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிற்சி பள்ளியின் தலைவரும், தலைமை பயிற்சியாளருமான ஷிகான் கே. பாண்டியன் தலைமை வகித்தார். மேலும், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏற்பாடுகளை, பயிற்சி பள்ளி செயலாளர் தலைவர் டி.முருகையன், பொருளாளர் ஜெ. ராஜசேகரன், புரவலர் மெடிக்கல் ஆர்.கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட் டுள்ள ஜூஜூட்சூ தற்காப்புக்கலை பயிற்சி பெற்றனர்.