districts

மார்ச் 8 வாகனம் பொது ஏலம்

திருச்சிராப்பள்ளி, பிப். 23 - திருச்சி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம்  மார்ச் 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட தொழில்  மைய அலுவலகத்தில் வைத்து பொது ஏலம் மூலம் விற்பனை  செய்யப்பட உள்ளது என மாவட்ட தொழில் மைய பொது மேலா ளர் தெரிவித்துள்ளார். வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் மார்ச் 2, 3 ஆகிய  இரண்டு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி  வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, சங்கம் ஹோட்டல்  எதிரில் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொலிரோ TN 45 0718 எண் ணுள்ள வாகனத்தினை நேரில் பார்வையிடலாம். மேலும் வாக னத்தினை ஏலம் எடுக்க விருப்பமுள்ளவர்கள் ஏலம் நடைபெ றும் நாளான 8.3.22 அன்று காலை 10 மணிக்குள் தங்களது ஆதார்  அடையாள அட்டையுடன் ரூ.5000 முன் பணம் செலுத்தி பெயர் களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  ஏலத் தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக  18 சதவீதம் சேர்த்து முழு தொகையையும் உடனடியாக செலுத்தி விட்டு வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏலத்தில்  கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு நட வடிக்கைகளை முறையாக பின்பற்றியிருக்க வேண்டும் என  திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.