districts

img

திருச்சியில் தலைகீழாக கவிழ்ந்த ஆம்னி பேருந்து  

திருச்சி அருகே ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

திருச்சி பஞ்சப்பூர் அருகே தூத்துக்குயிலிருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது.  திருச்சி பஞ்சப்பூர் மேக்குடி கிராமம் அருகே வந்துக்கொண்டிருந்தபோது மாடு குறுக்கே வந்ததால் டிரைவர் பேருந்தை வேகமாக திருப்பியதாக கூறப்படுகிறது. இதனார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஞானசேகர்(61) என்பவர் உயிரிழந்தார். மேலும் அதில் பயணித்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.  அதனைதொடர்ந்து காயமடைந்த 17 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

;