மன்னார்குடி, நவ.2 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூய்மை பணி இயக்கம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. மன்னார்குடியில் நடைபெற்ற தூய்மைப் பணி இயக்கத்திற்கு மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவராஜ் தலைமை வகித்தார். மன்னார்குடி தேரடியில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி தூய்மை பணியை துவக்கி வைத்தார். மேல ராஜவீதி, பெரியார் சிலை சதுக்கம், பந்தலடி, கீழ ராஜவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், வி.ச. நகரச் செயலாளர் ஜி.முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.