districts

மன்னார்குடி உழவர் சந்தையை மேம்படுத்த ஓய்வூதியர்கள் கோரிக்கை

மன்னார்குடி, மே 17 - அனைத்துத் துறை ஓய்வூதியர்களின் 4வது வட்ட மாநாடு மன்னார்குடியில் நடை பெற்றது. வட்டத் தலைவர் கா.அம்பிகாபதி தலைமை வசித்தார்.  இம்மாநாட்டில், மன்னார்குடி பேருந்து  நிலைய விரிவாக்கத்தின்போதே மன்னார்குடி  உழவர் சந்தையையும் விவசாயிகள், வியா பாரிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கழிப்பறை வசதிகளோடு மேம்படுத்தி சந்தை தொடர்ந்து  பேருந்து நிலையம் அருகில் செயல்பட வேண்டும்.  மேலும் மன்னார்குடி மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணிப்  பெண்கள், குழந்தைகள் மற்றும் புறநோயாளி களின் சிரமத்தை போக்கும்வகையில் அமரும் வசதியோடு மருத்துவமனை வளாகத் தில் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதி யர் சங்க மாநாடு மாவட்ட நிர்வாகத்தையும் மருத்துவமனை கண்காணிப்பாளரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

;