குடவாசல், மே 19- பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் கொடுக்க முடி யாமல் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் குடும்பத்திற்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நன்னிலம் ஊராட்சி அலு வலகம் முன்பு வியாழனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் வேலங்குடி ஊராட்சி கமு தக்குடியில் மே 12-ஆம் தேதி பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பய னாளி லதா மகன் மணிகண்டனிடம் நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் பணி புரியும் ஓவர்சியர் மகேஸ்வரன் வீடு கட்டும் பணிக்கு பணம் விடுவிக்கவும், தொடர்ந்து வீடு வேலை நடைபெற 18 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சப் பணம் கொடுக்க முடி யாததால் மன உளைச்சல் அடைந்த மணிகண்டன் விஷமருந்தி தற்கொலை செய்வதாக கூறி சமூக வலை தளங்களில் வீடியோவாக பதிவிட்டு இருந்தார். பின்னர் காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலன் இன்றி மே 12-ஆம் தேதி மணிகண்டன் உயி ரிழந்தார். இதையடுத்து உடனடியாக நன்னிலம் ஒன்றிய குழு சார்பாக வும், தொடர்ந்து மாவட்ட குழு சார் பாக மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி மணிகண்டனின் இல்லத் திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி னார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்னி லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தற்கொலை செய்துகொண்ட மணிகண்டன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும், மணி கண்டனின் குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும், அரசு திட்டங்கள் விரைவாக செயல்பட தொடர் கண்காணிப்பு அரசு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தலை மை வகித்தார். மாநிலக் குழு உறுப்பி னர் ஐ.வி.நாகராஜன் உரையாற்றி னார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன், நகர செயலாளர் சீனி.இராஜேந்தி ரன் மற்றும் ஒன்றிய குழு உறுப் பினர்கள், கிளை செயலாளர் கலந்து கொண்டனர்.