சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர் கட்டாயம் பதிவு செய்ய அறிவுறுத்தல்
அரியலூர், நவ.24 - அரியலூர் மாவட்டத்தில் சுற்றுலா தொழில் சார்ந்த தொழில் முனைவோர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “சுற்றுலாத் துறை வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனொரு பகுதியாக உலக சுற்றுலா தினத்தன்று சுற்றுலா வழிகாட்டி, சுற்றுலா இயக்கு பவர், பயண முகவர்கள், சுற்றுலா போக்குவரத்து ஆபரேட்டர் ஆகியோர் பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் முறை யான உரிமம் இல்லாமல் தங்கள் சுற்றுலா தொழில் வணி கத்தை நடத்தி வருகின்றனர். உரிமம் இல்லாமல் சுற்றுலா சார்ந்த தொழில் நடத்துவது சட்டப்படி குற்றம். எனவே உடனடி யாக பதிவு செய்யப்பட வேண்டும். இது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள தஞ்சா வூர் சுற்றுலா அலுவலர்-9176995873, அரியலூர் உதவி சுற்றுலா அலுவலர் - 9787484754, 7397715685 என்ற கைப்பேசி எண்கள் அல்லது அலுவலக தொலைபேசி எண் 04329-228450 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
பாபநாசம், நவ.24 - சட்டமன்ற நாயகர் கருணாநிதி கருத்தரங்கம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தது. சட்டமன்ற பேரவை கூடுதல் செயலர் ரவிச்சந்திரன் பேசினார். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலைஞர் குறித்த பேச்சுப் போட்டியில் உரை யாற்றினர். இதில், பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, பாப நாசம் பேரூராட்சி தலைவி பூங்குழலி, ஆசிரியர்கள், மாணவர் கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றி தழ், புத்தகம் வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மென்திறன் மேம்பாட்டு பயிற்சி
தஞ்சாவூர், நவ.24 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செங்க மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் மென்திறன் மேம் பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளி மாணவர் களின் கற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் வழங்கப்ப டும் இப்பயிற்சியில், மாணவர்களிடம் மறைந்து கிடக்கும் தனித் திறன்களை அடையாளப்படுத்துவது, நினைவாற்றலை அதி கரித்துக் கொள்வதற்கான வழிமுறைகள், சாதிப்பதற்கான சிக்கல்களை தெரிந்து கொள்ள உதவுவது, சிக்கல்களை தீர்ப்ப தற்கான வழிமுறைகளை விளக்குவது, குழு செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற ஊக்கப்படுத்துவது, நேர மேலாண்மை, தேர்வுகளை வெற்றிகரமாக எதிர்கொள்வது, தோல்விகளி லிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சிகள் நடைபெற்றன. பயிற்சியை தலைமை ஆசிரியர் வளர்மதி துவக்கி வைத்தார். பயிற்றுநர் இளங்கோ பயிற்சி வழங்கினார். பயிற்சி யின் நோக்கங்கள் குறித்து திட்ட ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் விளக்கிப் பேசினார். பயிற்சி யில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட னர்.
கூரை வீடு தீப்பற்றி எரிந்து சாம்பல்
தஞ்சாவூர், நவ.24 - தஞ்சாவூர் மாவட்டம் மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (65). இவரது மகன்கள் சரவணன், வீரமணி, ராஜலிங்கம், சக்திவேல் ஆகியோர் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனர். நடராஜன் தனது மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக் குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக ஒரே கூரை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை வீட்டில் உள்ள அனைவரும் விவசாய வேலைக்கு சென்ற நிலையில், கூரை வீடு எதிர்பாராதவிதமாக தீப்பற்றியது. வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்த நடராஜனின் மகன் சரவணன் வீடு எரிந்ததை பார்த்து தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்ற னர். இதனிடையே பேராவூரணி தீயணைப்பு துறையின ருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் சீனிவா சன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சென்று அக்கம் பக்கம் தீ பரவாமல் அணைத்து விட்டனர். ஆனாலும் வீடு முழு வதுமாக தீயில் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த ரொக்கப்பணம் ரூ.20 ஆயிரம், 5 பவுன் நகை, வீட்டிலிருந்த பொருள்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்தும் தீயில் எரிந்து கருகின. மின்கசிவினால் தீப்பற்றி இருக்கும் என கூறப்படுகிறது. தகவ லறிந்த வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர் களுக்கு உணவு, உடை வழங்கி, அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதுகுறித்த சேதுபாவாசத்திரம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 9,689 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி ஆட்சியர் தகவல்
பெரம்பலூர், நவ.24 - பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 9,689 விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.9.54 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், “முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 2.50 ஏக்கருக்கு மேற்படாத நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கருக்கு மேற் படாத புஞ்சை நிலத்தினை சொந்தமாக வைத்திருந்து, இந்நிலத்தில் நேரடியாக பயிர் செய்யும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஊதியத்திற் காகவோ அல்லது குத்தகை அடிப்படை யிலோ ஈடுபட்டுள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் குத்த கைதாரர்கள் சமூகப் பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரிடம் மனு அளித்து இத்திட்டத் தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் திருமண உதவித்தொ கையாக ஆண்களுக்கு ரூ.8,000, பெண் களுக்கு ரூ.10,000, விபத்து நிவாரண உதவித் தொகையாக ரூ.1,02,500 மற்றும் இயற்கை மரண உதவித் தொகையாக ரூ.22,500 தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2021 முதல் தற்போது வரை 5,871 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1.47 கோடியும், 980 பேருக்கு ரூ.82.43 லட்சம் திருமண நிதி உதவியும், 2,723 விவசாயிகளுக்கு இயற்கை மரண உதவி யாக ரூ.6.07 கோடியும், விபத்தில் உயிரிழந்த 115 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ரூ.1.1 8 கோடியும் என மொத்தம் 9,689 விவ சாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தின ருக்கு ரூ.9,54,13,000 (ரூ.9.54 கோடி) நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியில் இருந்து கடந்த மே 2021 முதல் இதுவரை மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து, விபத்து மூலம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட் டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைப் பொருட்கள் விற்பனை: தஞ்சையில் 3 கடைகளுக்கு சீல்
தஞ்சாவூர், நவ.24- தஞ்சாவூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்ற மூன்று கடைகளுக்கு உணவு பாது காப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தஞ்சாவூரில் மளிகை கடைகளுக்கும், சிறு பெட்டிக் கடைகளுக்கும் தேவையான தின்பண்டங் கள் விற்பனை செய்யும் கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவ தாக தகவல் வந்தது. இத னால் கடந்த சில வாரங் களுக்கு முன்பு, தஞ்சா வூர் மேற்கு காவல் நிலையத் தினர் மூன்று கடைகளில் உள்ளவர்களை கைது செய்தனர். இதன் தொடர் நடவ டிக்கையாக, வெள்ளிக் கிழமை தஞ்சாவூர் அய்யங் கடைத் தெருவில் உள்ள ர.மீனாட்சி (42) என்பவ ருக்கு சொந்தமான பட்டா ணிக் கடை, காமராஜ் மார்க்கெட்டில் த.மணி கண்டன் (33) என்பவருக்கு சொந்தமான மிட்டாய் கடை, வடக்கு வீதியில் உள்ள ஜ. பஞ்சாபிகேசன்(48) என்ப வருக்கு சொந்தமான மளி கைக் கடை ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்களை பறி முதல் செய்தனர். இதையடுத்து, தஞ்சா வூர் மாவட்ட உணவு பாது காப்பு துறையின் நியமன அலுவலர் டி.சித்ரா தலை மையிலான அதிகாரிகள் மூன்று கடைகளுக்கும் சீல் வைத்தனர். அப்போது உணவு பாதுகாப்பு அலுவ லர்கள் என்.சந்திரமோகன், ஆர்.விஜயகுமார், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வி.சந்திரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அங்ககப் பண்ணைய முறை பயிர் சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி
அரியலூர் நவ.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத் துறை சார்பில், சம்பா பருவத்திற்கான கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கான முதற்கட்டப் பயிற்சி, கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் வானதிரையன்பட்டினம் மற்றும் அங்கராயநல்லூர் கிராமங்களில் நடைபெற்றது. வட்டார வேளாண்மை இயக்குநர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் மகேந்திரவர்மன் முன்னிலை வகித்தார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன் விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தார். சர்வதேச சிறுதானிய ஆண்டான இந்த ஆண்டில், விவசாயிகள் குறைந்த சாகுபடி செலவு மற்றும் குறைந்த அளவு நீர் தேவைப்படும் கம்பு, திணை, வரகு, கேழ்வரகு, சாமை, சோளம் போன்ற ஊட்டச் சத்து மிக்க சிறு தானியங்களை சாகுபடி செய்ய வேண்டும் என்றும் அங்ககப் பண்ணைய முறையில் பயிர் சாகுபடித் தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கினார். மேலும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் சோலார் விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப் பொறி, மஞ்சள் மற்றும் நீல வண்ண ஒட்டும் அட்டை ஆகியவை குறித்து விளக்கி விவ சாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தார். உழவன் செயலியில் விவ சாயிகள் தங்கள் சாகுபடி நிலத்திற்கான மண் ஆய்வு முடிவுகளை பெற உதவும், ‘தமிழ் மண்வளம்’ செயலி குறித்து விளக்கி, மண் மாதிரி எடுக்கும் முறையை செய்து காண்பித்தார். தொடர்ந்து, விவசாயிகள் விவசாய கடன் அட்டை பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் சாமிதுரை செய்திருந்தார்.
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
அரியலூர், நவ.24 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் வியாழனன்று வாக்காளர் விழிப்பு ணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடையார்பாளையம் வட்டாட்சியர் கலிலூர் ரகுமான், தேர்தல் துணை வட்டாட்சியர் மீனா, கிராம நிர்வாக அலுவலர்கள் காமராஜ், புகழேந்தி, கிராம உதவியா ளர் தனசேகர் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள தொழில்பயிற்சி மாண வர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இப்பேரணி, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு தொடங்கி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
கனமழை காலங்களில் நெற்பயிரில் நீர், பூச்சி, நோய்த் தாக்குதலை தவிர்க்கும் வழிகள்
தஞ்சாவூர், நவ.24- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பட்டுக் கோட்டை வட்டாரத்தில் சுமார் 5,000 ஹெக்டேர் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரு கிறது. எனவே நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வயலில் உள்ள வடிகால் பகுதியில் தடைகள் இருந்தால், அதனை அகற்றி அருகில் உள்ள நீர் நிலைகளில் தேவைக்கு அதிகமான நீர் இலகுவாக சென்ற டைய வழிவகை செய்ய வேண்டும். இதுபோன்ற வெள்ள அபாய சமயங்களில், நிலங்களில் சத்து இழப்பு ஏற்பட்டு பயிர் பாதிக்க நேரிடும். இதனை சரிசெய்ய வெள்ள நீரை வடிக்க வேண்டும். நெற்பயிர் இளம் பயிராக இருந்தால், இலைவழி தெளிப்பாக 2 கிலோ யூரியா 20 லிட்டர் நீரில், ஒரு கிலோ ஜிங்க் சல்பேட்டை 10 லிட்டர் நீரில் ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி, 200 லிட்டராக பெருக்கி, ஓர் ஏக்கருக்கு கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும். நெற்பயிரில் தண்டு உருளும் நிலை அல்லது பூக்கும் தருவாயில் இருந்தால், இலைவழி தெளிப்பாக 4 கிலோ டிஏபி 40 லிட்டர் நீரிலும், 2 கிலோ யூரியாவை 20 லிட்டர் நீரிலும், 1 கிலோ பொட்டாஷை 10 லிட்டர் நீரிலும் கரைத்து ஒருநாள் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி 200 லிட்டராக பெருக்கி, ஓர் ஏக்க ருக்கு கைத்தெளிப்பானைக் கொண்டு தெளிக்க வேண்டும். வயலில் நீரை வடித்தவுடன் மேலுரமாக ஏக்கருக்கு 30 கிலோ அமோ னியம் சல்பேட், 15 கிலோ பொட்டாஷ், 10 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும். அல்லது 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 17 கிலோ பொட்டாஷ் உரங்களை மேலுரமாக ஓர் ஏக்கருக்கு இடவேண்டும். பயிர் நன்கு வளர்ச்சியடையும்போது பூச்சி மற்றும் நோய்த் தாக்கு தல் அதிகமாக இருக்கும். அதற்கு 1 கிலோ சூடோமோனாஸ் புளோர சன்ஸ் மற்றும் ஒரு லிட்டர் புளித்த தயிரை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இக்காலங்களில் நெற்பயிரில் ஏற்படும் இலை உறை நோயை கட்டுப்படுத்த புரப்பி கோனசோல் 200 மில்லி அல்லது கார்பன்டசிம் 200 கிராம், ஒரு ஏக்க ருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும். மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறலாம்” எனக் கூறப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அரியலூர், நவ.24 - பள்ளிக் கல்வித்துறை சார்பில், அரியலூர் வருவாய் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான சாலையோர மிதிவண்டி போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போட்டி, மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி செந்துறை சாலை வழியாக ராம்கோ சிமெண்ட் ஆலை நுழைவு வாயில் வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கை வந்தடைந்தது. சுமார் 7 கி.மீ தூர இந்த சைக்கிள் போட்டி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடை பெற்றது. அரியலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்ற னர். இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகள் மாநில அளவி லான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
வாரிசு வேலை முறையை மீண்டும் கொண்டு வருக! வருவாய் கிராம ஊழியர்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூர், நவ.24 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. இதற்கு வட்டாரத் தலைவர் கமலஹாசன் தலைமை வகித்தார். நீலகண்டன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் விஜயகுமார், வட்டார செயலாளர் சத்யா, பொருளாளர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். போராட்டத்தில், பணியில் இருக்கும் கிராம உதவியா ளர்கள் எவரேனும் இறந்து விட்டால், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வாரிசுக்கு வேலை வழங்கப்பட்டது. இந்த நடைமுறை தற்போது 2023 மார்ச் முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை மீண்டும் கொண்டு வர வேண்டும். மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்கள் பெற்று வந்து, தற்போது நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் படி ரூ.2,500 -ஐ திரும்ப வழங்க வேண்டும். ஜனவரி 2023-க்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை கள் நிறைவேற்றப்படாத நிலையில், சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக் கும், அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். கால நேரம் பார்க்காமல், 24 மணிநேரமும் பணியாற்றும் கிராம உதவி யாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்கி டி பிரிவில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.