districts

img

பருத்திச்சேரி - குடவாசல் இடையிலான குடமுருட்டி ஆற்றுப் பாலத்தை கான்கிரீட் பாலமாக அமைத்துத் தருக!

ஆற்றில் இறங்கி சிபிஎம் போராட்டம் கும்பகோணம், டிச.19 - குடமுருட்டி ஆற்றுப் பாலத்தை கான்கிரீட்  பாலமாக அமைத்துத் தரக் கோரி செவ்வா யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே (திருவாரூர் மாவட்ட எல்லைப் பகு திக்கு இடையே) பருத்திச்சேரி குடமுருட்டி ஆறு செல்கிறது. திருவாரூர் மாவட்டத்தின் குடவாசல் அரசு மருத்துவமனைக்கும், நகரத்திற்கும் செல்வதற்கு திருவிடைமருதூர் ஒன்றியம் பருத்திச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த குடமுருட்டி ஆற்றின் தற்காலிக மரப்பாலத்தை, கோடை  நாட்களில் பயன்படுத்தி வந்தனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகம் இருப்பதால், கிராம மக்கள் ஆற்றின் குறுக்கே  மூங்கில் கம்புகளால் ஆன பாலங்களை தற்காலிகமாக அமைத்து பயன்படுத்தி வரு கின்றனர். ஆனால் அந்தப் பாலம் பாதுகாப் பற்ற நிலையில் உள்ளது. இதனை கான்கிரீட் பாலமாக அமைத்துத் தர வேண்டுமென கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பலமுறை அதிகாரிகளிடம் முறை யிட்டும் அலட்சியப்படுத்தினர். இந்நிலையில், கட்சியின் திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் செவ்வா யன்று பருத்திச்சேரி ஆற்றில் இறங்கி கவன  ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பருத்திச்சேரி கிளைச்  செயலாளர் எம்.வீரமணி தலைமை வகித்தார்.  பருத்திச்சேரி கிராம வாசிகள் முன்னிலை  வகித்தனர். தஞ்சை மாவட்ட செயற்குழு  உறுப்பினர் சி.ஜெயபால், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல், திரு வாரூர் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லட்சுமி, குடவாசல் தெற்கு ஒன்றியச் செயலா ளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.