districts

img

கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குழந்தை சாட்சி மையம் திறப்பு

கரூர், ஆக.29 - கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார் பாதிக்கப்படக் கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்து வைத்தார். இதில் நீதிபதிகள் கே.குமரேஷ் பாபு, ஆர்.சக்திவேல், பி.தனபால், ஆர்.சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமை வகித்தனர். கரூர் மாவட்ட  தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சி. ராஜலிங்கம், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் சென்னை உயர்நீதிமன்ற நீதியர சர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி தெரி வித்ததாவது: பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் சாட்சி களை விசாரிக்க கூடிய மையம், அதனுடைய தேவை என்ன, இப்படிப்பட்ட ஒரு மையம் இருந் தால்தான் நாம் அப்படிப்பட்ட சாட்சிகளை  விசாரிக்க முடியுமா, இதற்கு முன்னால் இது போன்ற வழக்குகளை விசாரிக்கவில்லையா என்று பலர் நினைக்கலாம்.  ஆனால் பாதுகாக்கப்பட்ட ஒரு குழந்தை நீதித் துறை வளாகத்தில், நல்ல சூழல் இருந்தால் தான் குழந்தைகள் பயப்படாமல் சாட்சி சொல் வர். அவர்களுக்காக அமைக்கப்பட்டதுதான் இந்த மையம். சில வழக்குகளில் பாதிக்கப் பட்ட குழந்தைகளின் சாட்சியங்கள் மிக முக்கிய மானதாக இருக்கும் போது, அவர்களின் சாதக மற்ற சூழ்நிலையால் வழக்கை விசாரிக்க முடியா மல் போகிறது. இந்த காரணத்தால், உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற மையங்கள் கட்டு வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

முதல் மையம் திருவண்ணாமலை மாவட்டத் திலும், இரண்டாவது மையம் கரூர் மாவட்டத்தி லும்தான் கட்டப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சி சொல்வதற்கு, பயமில்லாத ஒரு  சூழ்நிலையை உருவாக்க வேண்டும். குறிப்பாக  குறுக்கு விசாரணை என்று வரும்போது,  வழக்கறிஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கெல் லாம் பயப்படாமல் சாட்சி சொல்பவர்களின் எண் ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க  வேண்டும் என்று வரும் சாட்சிகளுக்கு,  குறைந்தபட்ச பாதுகாப்பு என்ன என்று மனதில் தோன்றுகிறது. அதன் வெளிப்பாடுதான் இந்த  விசாரணை மையம் அமைப்பதற்கு வழிவகுத்தது. பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படக் கூடிய  குழந்தை சாட்சிகளை விசாரிப்பதற்காக இந்த  மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத் தில் சாட்சிகள் மற்றும் குற்றவாளிகள் அல்லது  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தனித்தனியே வந்து  செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது.  குற்றம் சாட்டப்பட்டவரும், சாட்சி சொல்பவ ரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளாத அள விற்கு ஒலிவாங்கி மூலம் நீதிபதி விசாரிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சாட்சி, குற்றம் சாட்டப்பட்டவரை நேரில் பார்த்து அடையாளம் சொல்ல வேண்டிய  சூழ்நிலை வந்தால் மட்டுமே, அந்த திரை விலக்கப் பட்டு இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் வகை யில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.