கீரனூரில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க எம்.சின்னதுரை எம்எல்ஏ கோரிக்கை
புதுக்கோட்டை, செப்.18 - புதுக்கோட்டை மாவட்டம் கீர னூரில் போக்குவரத்து காவல் நிலையம் அமைக்க வேண்டு மென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் வந்திதா பாண்டேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரி வித்திருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி நகரத்தை தாண்டி பொன்னமராவதி, ஆலங்குடி ஆகிய பேரூராட்சிகளில் போக்கு வரத்து காவல்துறை அலுவலகம் உள்ளது. போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள பேரூ ராட்சியாக கீரனூர் உள்ளது. புதுக்கோட்டை மார்க்கமாக சென்னை, கோவை, பெங்க ளூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள், கனரக வாகனங் கள் மற்றும் இதர வாகனங்கள் கீரனூர் வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. அதேபோல திருச்சி மார்க்கமாக காரைக்குடி, இராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு செல்லும் வாகனங்களும் கீர னூர் வழியாகத்தான் செல்ல வேண் டியுள்ளது. மேலும், கீரனூரைச் சுற்றி யுள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து வர்த்தகம், போக்கு வரத்து உள்ளிட்ட பல்வேறு கார ணங்களுக்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மையமாகவும் கீரனூர் உள்ளது. இதனால், கீரனூரில் போக்குவரத்து அடிக்கடி ஸ்தம் பிக்கும் நிலை உள்ளது. எனவே கீரனூரில் வட்டாரப் போக்கு வரத்து நிலையத்தை உருவாக்கி, போக்குவரத்துக் காவலர்களை நியமித்து சாலைப் போக்கு வரத்தை சீரமைக்க வலியுறுத்து கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்க வர்த்தகர்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூர், செப்.18- தஞ்சாவூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், முன்பு அமைக்கப் பட்ட சிக்னல்களை சீரமைத்து, அவை செயல் பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சா வூர் தொழில் வர்த்தக சங்கத்தினர் வலி யுறுத்தியுள்ளனர். தஞ்சாவூரில், தொழில் வர்த்தக சங்கத் தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் பி.மாற வர்மன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட ஆட்சி யர் தீபக்ஜேக்கப், கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் முத்தமிழ்செல்வன், மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மாவட்ட தீய ணைப்பு அலுவலர் ச.குமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் வீ.மணி வண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப் பட்ட மனுவில், “தஞ்சாவூர் பெரிய கோயி லுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்வ தால், கர்நாடகா, கேரளா மாநிலங்களி லிருந்து அதிகளவில் ரயில்களை இயக்க வேண்டும். ரயில் பெட்டி பராமரிப்பு முனையத்தை தஞ்சாவூரில் அமைக்க வேண் டும். திருச்சி கோட்டத்தில், தஞ்சாவூர் ரயில் நிலையம் கடந்த 2022-2023 இல் ரூ.43 கோடி வருவாய் ஈட்டியுள்ளதால், பயணிகளுக்கு கூடுதல் வசதி செய்து தர வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், ரயில்வே போக்குவரத்து மூலம் இயக்கப்படும் சரக்கு ரயில் இயக்கத்தை நகருக்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும். தஞ்சாவூர் மாநகரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களும் பழுதடைந்துள்ளன. போக்குவரத்து நெரி சலை குறைக்கும் வகையில் சிக்னல்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேரீஸ் கார்னர் பாலத்தை விரைவில் நீட்டித்து தர வேண்டும். அந்த பகுதியில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க கூடுதலாக காவல்துறையினரை நியமிக்க வேண்டும். விழாக்காலங்களில் தஞ்சாவூர் ராஜ வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தஞ்சாவூர் மாநகரில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை காலம் தாழ்த்தாமல் உடனே முடிக்க வேண்டும்” என வலியுறுத்தப் பட்டன.
அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபாரத வட்டி தள்ளுபடி
திருச்சிராப்பள்ளி, செப்.18- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதியுதவி திட்டத்தின்கீழ் 1990-91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையை செலுத்தினால் வட்டி மற்றும் அபாரத வட்டி தள்ளுபடி செய்யப்படும். மேற்கண்ட திட்டங்களில் பெற்ற கடன்தொகையினை ஒரே முறையில் செலுத்தி, நேர் செய்யும் திட்டத்தின்கீழ் அசல் தொகையை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபாரத வட்டி தள்ளுபடி செய்து, கடன் தொகை நிலுவையில்லா சான்று, தாட்கோ மாவட்ட மேலாளர் களால் வழங்கப்படும். இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவல கம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவல கச் சாலை, திருச்சிராப்பள்ளி - 620001 (0431-2463969) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
குடவாசலில் தமுஎகச புதிய கிளை துவக்கம்
திருவாரூர், செப்.18 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டது. குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே தமுஎகச குடவாசல் புதிய கிளை அமைப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்.நீதிராஜன் தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.சௌந்தர ராஜன் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி.வெங்கடேசன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். இதில் சங்கத்தின் புதிய கிளைத் தலைவராக பா.கலை வாணன், செயலாளராக எஸ்.நீதிராஜன், பொருளாள ராக ஏ.வி.சுப்பிரமணியன், துணைத் தலைவர்களாக எம். சுந்தரய்யா, த.ஜெயகாந்தன், இணைச் செயலாளர்களாக பா.சுகதேவ், ஏ.தவுலத்அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
400 மெ.டன் பாசிப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு
விருதுநகர், செப்.18- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மூலம், பாசிப்பயறுகளை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன்படி, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்ப னைக்கூடத்தில் பாசிப்பயறு தலா 200 மெ. டன் கொள்முதல் செய்யப் பட உள்ளது. பாசிப்பய றுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.85.58 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாசிப்பயறில் அதிகபட்ச மாக இதரப் பொருட்கள் கலப்பு 0.1 சதவீதமும், இதர தானியங்கள் கலப்பு 0.1 சதவீதமும், சேத மடைந்த பருப்புகள் 0.5 சத வீதமும், வண்டு தாக்கிய பருப்புகள் 2 சதவீத மும், ஈரப்பதம் 10 சதவீதமும் இருக்கலாம் எனக் கூறப் பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பாசிப்பயறை சம்மந்தப்பட்ட ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் அசல் சிட்டா, கிராமநிர்வாக அலுவலர் கையொப்பமிட்ட அடங்கல், வங்கிகணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் கைபேசி எண் ஆகிய விவரங்களைச் சமர்ப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இக்கொள்முதல் வரும் நவம்பர் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும், விவசாயி களுக்கு பணம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டம் தொடர்பான விவரங்களை அறிய 04562 - 260410, 9003356172 மற்றும் 04566 - 220225, 8248369001 என்ற எண்ணை தொடர்பு கொள்ள லாம்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
திருச்சிராப்பள்ளி, செப்.18 - சென்னை தரமணியிலுள்ள Institute of Hotel Management Catering Technology & Applied Nutrition நிறு வனத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு B.Sc (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழுநேர பட்டபடிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பு, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர், உணவு மற்றும் பானசேவையில் கைவினைத் திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலு வலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப் படிப்பு, உணவு முறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப் படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப் படிப்பு ஆகியவற்றில் படிப்பில் சேர லாம். படித்த முடித்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். இதற்கான தகுதிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினச் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 10 மற்றும் 12 ஆம் வகுப் பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்ற வாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை, பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். இதில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியை அணுக வேண்டும். பதிவேற்றம் செய்வதற்கு கடைசி நாள்:19.9.2023. மேலும், விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியர் அலுவ லகச் சாலை, திருச்சிராப்பள்ளி - 620001 (0431-2463969) என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வந்தது
திருநெல்வேலி, செப் 18- அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவு-4 குழுவை சேர்ந்த மீட்பு படை வீரர்கள் திங்கட்கிழமையன்று நெல்லை வந்துள்ளனர். கமாண்டர் சஞ்சய் தேஸ்வால் தலைமையில் சுமார் 16 பேர் அடங்கிய குழுவினர் திங்கட்கிழமை காலை நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். பின்னர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் செல்வனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த குழுவினர் 14 நாட்கள் தங்கி இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அணைக்கட்டுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அடங்கிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை இந்த குழுவினர் மேற்கொள்ள உள்ளனர். அதே நேரத்தில் பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ளங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் குழுவினர் மாவட்டம் முழுவதும் செல்ல உள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆபத்தான காலகட்டங்களில் முதலுதவி சிகிச்சை முறைகள் அளிப்பது குறித்த பயிற்சிகளை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இந்த குழுவினர் அளிக்கின்றனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது
மதுரை, செப். 18- நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமலக்கண்ணன் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறு வனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாகத் தருவதாகவும், மாதாமாதம் 12 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வட்டி வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதை நம்பி தமிழகம் முழுவதும் ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள், மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகா ரளித்தனர். அதன்பேரில் நியோமேக்ஸ் நிதி நிறுவ னத்தின் நிர்வாக இயக்குநர்கள் வீரசக்தி, கமலக் கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்பட 19 பேர் மீது பொருளா தாரக் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த தால் பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர் களைத் தேடி வந்தனர். இந்நிலையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான கமலக்கண்ணன் சென்னையில் இருப்பதாக பொருளாதாரக் குற்றப்பிரிவு தனிப்படை காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்னை சென்ற தனிப்படை காவல்துறை அங்கு தங்கியிருந்த கமலக் கண்ணனை ஞாயிறன்று கைது செய்தனர். நியோமேக்ஸ் நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை நிறுவனத்தின் 752 வங்கிக்கணக்குகள் மற்றும் அதிலிருந்த ரூ.17.52 கோடியை பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.