புதுக்கோட்டை, ஜன.7 - ஒன்றிய, மாநில அரசுகள் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டு மென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தெரிவித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் புதுக்கோட்டை மாவட்ட 16 ஆவது மாநாடு புதுக்கோட்டை யில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் உரையாற்றிய எம். சின்னதுரை எம்எல்ஏ பேசியதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ந்து விழிப்புணர்வு இயக் கங்களை நடத்தி வருகிறது. அறி வியலை அழிவுப்பாதையில் அல்லாமல், மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அறிவியல் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாணவர்களை அறி வார்ந்த சமூகமாக உருவாக்கு வதற்கு தொடர் முயற்சிகளை மேற்கொள்கிறது. அறிவியல் பிரச்சாரத்தை பள்ளி கள், கல்லூரிகள், கிராமங்கள் தோறும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் விரைவில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதுக்கோட்டையில் பிறந்த டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியைப் போல அநீதிகளை எதிர்த்த வீர மங்கை களாக பெண்கள் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக மாநாட்டுப் பேர ணியை புதுக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது மாநாட்டுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் லெ.பிரபா கரன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ் ணன், நகர்மன்றத் தலைவர் திலக வதி செந்தில், நகர்மன்ற உறுப்பி னர் செந்தாமரை பாலு, ரோஸ் ஆதப்பன், நேரு யுவகேந்திரா உதவித்திட்ட அலுவலர் ஆர்.நமச்சிவாயம் ஆகியோர் பேசினர். இஸ்ரோ சென்று வந்த மாண வர்கள் மனோஜ், யோகபிரபாகர் ஆகியோர் பாராட்டப்பட்டனர். முன்னதாக க.சதாசிவம் வர வேற்க, இரா.ராமதிலகம் நன்றி கூறி னார். புதிய நிர்வாகிகள் தேர்வு பிரதிநிதிகள் மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் எம்.வீரமுத்து தலைமை வகித்தார். செயலாளர் மு.முத்துக்குமார்,
பொருளாளர் டி. விமலா ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். மாநாட்டை தொடங்கி வைத்து மாநில பொதுக் குழு உறுப்பினர் அ.மணவாளன் உரையாற்றினார். மாநாட்டில் தலைவராக மு. முத்துக்குமார், செயலாளராக எம். வீரமுத்து, பொருளாளராக டி. விமலா, துணைத் தலைவர்களாக க.சதாசிவம், இரா.இராமதிலகம், ஆர்.பிச்சைமுத்து, ஈ.பவுனம்மாள், ஆ.செல்வராசு, பெ.புவியரசு, இணைச் செயலாளர்களாக சி.ஷீபா, க.வடிவேல், மு.சாமி யப்பன், நா.ரெஜினாபேகம், வீ. சண்முகப்பிரியா, க.ரா.ஓவியா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளா கத் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மாநில துணைத் தலைவர் எம். மாணிக்கத்தாய் சிறப்புரை யாற்றினார். முன்னதாக க.ஜெய ராம் வரவேற்க, சி.ஷீபா நன்றி கூறி னார். அறிவியல் கண்காட்சி கூடம் அமைத்திடுக! தமிழக அரசு வானவில் மன்றங் களை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தி, மாணவர்களிடம் அறிவியல் சிந்த னையை வளர்க்க வேண்டும். புதுக் கோட்டை மாவட்டத்தில் நவீன அறி வியல் தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய கோளரங்கம், அறிவியல் பூங்கா மற்றும் கண்காட்சி கூடம் அமைத்துத் தர வேண்டும். தமிழ்நாடு அரசு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மணமேல்குடி, ஆவுடை யார்கோவில் பகுதிகளை உள்ள டக்கி புதிய அரசு கலை அறிவி யல் கல்லூரி தொடங்க வேண்டும். தமிழ்நாடு அரசு மாநில கல்விக் கொள்கையை விரைந்து வெளி யிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.