தஞ்சாவூர், அக்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாநகர 24 ஆவது மாநாடு, தஞ்சாவூர் கீழவாசல் நவ மணி திருமண மண்டபத்தில் தோழர்கள் எம்.எஸ்.ராஜா, பி.மூர்த்தி நினைவரங்கில் நடைபெற்றது. மூத்த தோழர் என்.சீனி வாசன் தலைமை வகித்தார். மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன் வரவேற்றார். மாவட்டச் செயற்குழு உறுப் பினர் சி.ஜெயபால் துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். சரவணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் என்.குரு சாமி, எஸ்.செல்வராஜ் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் நிறைவுரையாற்றினார். கீழ வாசல் கிளைச் செயலாளர் ஆர்.ஜெயபால் நன்றி கூறினார். மாநாட்டில் 12 பேர் கொண்ட மாநகரக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநகரச் செயலாளராக எம். வடிவேலன் தேர்வு செய் யப்பட்டார். தஞ்சையில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் முடிந் துள்ள பணிகள், செலவான நிதி விபரம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். மாநக ரில் தொல்காப்பியர் சதுக்கம், பூக்காரத் தெரு பகுதிகளில் பாதாளச் சாக்கடை கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதை சரி செய்ய வேண்டும். சாலை யோர சிறுகடை வணிகர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்து வமனையை தரம் உயர்த்தி சுகாதாரமாக வைக்க வேண்டும். ஆக்கிரமிப்பு மூலம் அகற்றப்பட்ட வீடு களில் வசித்த அனைத்து மக்களுக்கும் மாற்று குடி யிருப்பு வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.