புதுக்கோட்டை, டிச.30- புதுக்கோட்டை அருகே மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டடிபட்டு சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பயிற்சித் தளத்தை நிரந்தமாக மூட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே கொத்தமங்கலத்துப்பட்டியைச் சேர்ந்த வர் கலைச்செல்வன்-பழனியம்மாள் தம்பதிய ரின் மகன் புகழேந்தி(11). இவர், நார்த்தாமலை யில் உள்ள தனது தாத்தா வீடான முத்து வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், நார்த்தா மலைக்கு அருகில் பசுமலைப்பட்டியில் காவல் துறைக்குச் சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சித்தளத்தில் வியாழக்கிழமையன்று மத்திய பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் போது சக்திவாய்ந்த துப்பாக்கிலிருந்து வெளிப்பட்ட இரண்டு தோட்டாக்கள் சிறுவன் புகழேந்தி தங்கியிருந்த குடிசைக்குள் பாயந்துள்ளது. அதில் ஒரு தோட்டா சிறுவனின் தலைக்குள் பாய்ந்தது.
இதனால், படுகாயமடைந்த சிறுவன் புகழேந்தி கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பிறகு, மேல் சிசிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அங்கு சிறுவனின் தலைக்குள் இருந்த தோட்டா அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சிறுவன் இன்னும் ஆபத்தான கட்டத்தைத் தாண்டவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மேற்படி பயிற்சி தளத்தை தற்காலிகமாக மூட புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சித்தளத்தை நிரந்தரமாக மூடுக: எம்.சின்னத்துரை எம்எல்ஏ
தகவலறிந்த கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னத்துரை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்குச் சென்று சிறுவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உரிய உயர் சிகிச்சை அளிக்கவும் கோரினார். அவருடன் கந்தர்வகோட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் பா.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோக ரன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிவர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமையன், இந்திய மாணவர் சங்க மாநில நிர்வாகி அரவிந்தன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதுகுறித்து எம்.சின்னத்துரை எம்எல்ஏ தெரிவிக்கையில், ஏற்கனவே, சித்தப்பட்டியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் முருகேசன் என்பவ ருக்கு இதேபோல வயிற்றில் குண்டடிபட்டு பல லட்ச ரூபாய் செலவழித்து உயிர்பிழைத்துள் ளார். இதுவரை அவருக்கு அரசால் எந்த நிவார ணமும் கிடைக்கவில்லை. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், ஒரு பெண்ணுக்கு துப்பாக்கி தோட்டா பாய்ந்து காலில் படுகாயம் உள்ளிட்ட சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
பொதுவாக மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில்தான் இதுபோன்ற பயிற்சி தளம் அமைக்கப்படும். துப்பாக்கியிலிருந்து வரும் தோட்டாக்கள் மண்ணுக்குள் புதையும் வகை யில் உள்ள மலைப்பகுதிகள்தான் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும். ஆனால், பசுமலைப்பட்டி யில் உள்ள பயிற்சி தளத்திற்கு மிக அருகில் குடியிருப்புகள் உள்ளன. மேலும், இங்குள்ள மலைக்குன்றுகள் கருங்கல் பாறைக ளால் ஆனது. இதில் மோதி தெறிக்கும் தோட்டாக் கள் பொதுமக்ளுக்கு பல ஆபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. எனவே, மேற்படி பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தை நிரந்தரமாக மூடுவ தற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் மறியல் போராட்டம்
இதற்கிடையில், நடந்துள்ள சம்பவத்தை கண்டித்து புகழேந்தியின் உறவினர்கள் நார்த்தாமலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்த மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மேற்படி சம்ப வங்கள் அப்பகுதியினரிடையே பெரும் அச் சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.