districts

img

கல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய இளைஞர் மூன்றாவது நாளில் சடலமாக மீட்பு

புதுக்கோட்டை, நவ.28-  புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய இளைஞர் மூன்று நாட்களுக்குப் பிறகு  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட உப்பிலிக்குடி அருகே உள்ளது ஏடிகே நகர். இப்பகுதி யைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன்  செல்வம் (27). இவருக்கு ரேவதி என்ற மனை வியும் இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை யும் உள்ளது.   செல்வம் சென்ட்ரிங் வேலை, ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு கூலித்தொழில்களை செய்து வந்தார்.  இந்நிலையில், செல்வம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் கடை யில் முடிதிருத்தம் செய்துவிட்டு அருகில் உள்ள பழைய கல்குவாரி குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.  100 அடி ஆழமுள்ள பாறை குளத்தில் குளிக்க சென்ற செல்வம் எதிர்பாராத வித மாக நீரில் மூழ்கியுள்ளார். வெகு நேரமாகி யும் செல்வம் வீடு திரும்பாததால் அவரது  குடும்பத்தினர் கல் குவாரி குளத்திற்குச் சென்று பார்த்த போது அவரது உடை கள் மட்டும் அங்கு இருந்துள்ளன. இதனால்  அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அருகே இருந்தவர்களிடம் விசாரித்த போது  செல்வம் குளித்துக் கொண்டுதான் இருந் தார் என்று தெரிவித்தனர். இதுகுறித்து கீரனூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற தீய ணைப்புத்துறை வீரர்கள் பாதாள கரண்டி  மூலம் இரண்டு மணி நேரம் தேடியும் இளை ஞர் செல்வத்தின் உடல் கிடைக்காததால், பின்னர் நீர்மூழ்கி கேமரா மூலம் இளை ஞரின் உடலை தேட ஆரம்பித்தனர். தீய ணைப்புத் துறையினர் சுமார் ஆறு மணி  நேரமாக தேடியும் இளைஞரின் உடல் கிடைக்கவில்லை. இந்நிலையில், திங்கள்  கிழமை காலை முதல் மீண்டும் இரண்டு குழுக்களாக பிரிந்து செல்வத்தின் உடலை  தேடும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் தண்ணீரில் சிக்கியுள்ள உடலைக் கண்டறிய முடியாத தால் அந்த முயற்சியும் தோல்வி அடைந் தது.  இந்நிலையில், மூன்றாவது நாளான செவ்வாய் கிழமை  இளைஞர் செல்வத்தின்  உடலை தீயணைப்புத் துறையினர் தேட இருந்த நிலையில், அதிகாலையில் செல்  வத்தின் உடல் தானாக மிதந்து வெளியே  வந்தது. அதனை தீயணைப்புத் துறை யினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் செல்வத்தின் குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமத்தையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.  எம்.சின்னத்துரை எம்எல்ஏ ஆறுதல்  இளைஞர் செல்வம் நீரில் மூழ்கிய நாளில் இருந்து தீயணைப்புத்துறை உள் ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு மீட்புக்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சிபிஎம் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை மாலை  வைத்து அஞ்சலி செலுத்தியதோடு உப்பி லிக்குடி கிராமத்திற்குச் சென்று உறவினர் களுக்கும் ஆறுதல் தெரிவித்தார். அவரு டன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச்செல் வன், ஊராட்சி மன்றத் தலைவர் செல்லத் துரை, முன்னாள் தலைவர் பாலமுத்து உள்ளிட்டோர் உடன் சென்றனர்.