districts

img

நாட்டை கலவர பூமியாக மாற்றத் திட்டமிடும் பாஜக

நீடாமங்கலம், ஆக.31 - ஒன்றிய பாஜக அரசு, மதச் சார்பற்ற இந்தியாவை கலவர பூமி யாக மாற்றத் திட்டமிட்டுக் கொண்டி ருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் ஒன்றியக் குழுவின் கோரிக்கை மாநாடு பொதுக்கூட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலை எதி ரில் புதனன்று நடைபெற்றது. மாநாட் டிற்கு ஒன்றியச் செயலாளர் டி. ஜான்கென்னடி தலைமை வகித்தார்.  நகரச் செயலாளர் வி.தமிழ்மணி வர வேற்றார்.  இதில் கந்தர்வகோட்டை சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை பேசுகையில், “திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கொள்கைக்கான கூட்டணி.  இந்தியாவில் அனைத்து மாநிலங் களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது இக்கூட்டணி.  இன்றைக்கு ‘நாடு பெரிதா மதம்  பெரிதா’ என்ற போராட்ட நிலையை ஒன்றிய பாஜக அரசு ஏற்படுத்திவிட்டது. இதில் நாட்டை பாதுகாப்பதற்கு ஒரு கூட்டமும், மதத்தை பாதுகாப்பதற்கு ஒரு கூட்ட மும் இருக்கின்றன. நாட்டை பாது காப்பது இடதுசாரி கூட்டம். மதத்தை  பாதுகாப்பது வலதுசாரி கூட்டம்.  வலதுசாரிகள், கார்ப்பரேட்டை பாதுகாப்பதற்கு மட்டுமே துணை நிற்கிறார்கள். கோடிக்கணக்கான  உழைப்பாளி மக்களை பாதுகாப் பதற்கு இடதுசாரிகள் மட்டும்தான் உள்ளனர். மதச்சார்பற்ற இந்தி யாவை, பாஜகவினர் கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். மக்கள் இடதுசாரிகள் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காகவே, மதம், இனம், சாதிய குழுக்களை பயன்படுத்தி, ஒருவருக்கு ஒருவரை  மோதவிடும் சதிகளை செய்து கொண்டிருக்கிறது மதவாத பாஜக.  இதை நாம் முறியடிக்க வேண்டும்” என்றார். மேலும், தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில  பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், இனியும் தாமத மின்றி நீடாமங்கலத்தில் ரயில்வே  மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும். பழுதடைந்த கிராமப்புற  சாலைகளை செப்பனிட வேண்டும்.  நூறு நாள் பணியில் போடப்பட்ட கிராமப்புற மண் சாலைகளை தார்ச்  சாலையாக மாற்றிட வேண்டும். குடி மனைப் பட்டா இல்லாத அனைவருக் கும் குடிமனைப் பட்டா வழங்க வேண் டும். நீடாமங்கலம் நகரத்தில் துவங்கப் பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியை  விரைந்து முடிக்க வேண்டும். கிராமப் புறம்-நகர்ப்புறத்தில் பழுத டைந்துள்ள தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக, புதிய வீடுகள் கட்டித் தர  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.