புதுக்கோட்டை, பிப்.15 - நடப்பு நிதியாண்டிலேயே புதுக் கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டுமென எம்.சின்ன துரை எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியனுடன் இணைந்து, தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச் சர் ராஜ.கண்ணப்பனிடம் அளித் துள்ள கோரிக்கை மனுவில் தெரி வித்திருப்பதாவது: எனது கந்தர்வகோட்டை சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரனூர் பேரூராட்சியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கீர னூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டா ரத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியினராக உள்ளனர். இப்பகுதியில் இருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான மாண வர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுகின்றனர். இவர்கள் உயர்கல்விக்காக திருச்சிக்கோ, புதுக்கோட்டைக்கோ வெகுதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், பல பின்தங்கிய குடும்பத் தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, கிராமப் புற மாணவிகள் உயர்கல்வி பயில முடியாமல் பெரிதும் பாதிப்படை கின்றனர். கீரனூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வலி யுறுத்தி இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வரு கின்றனர். நானும் சட்டப்பேரவை யில், இதுகுறித்த கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகிறேன். குன் றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றி யக் குழுவிலும் இங்கு கல்லூரி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப் பட்டு, அரசின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. கீரனூர் அருகே கல்லூரி தொடங்குவதற்கு தேவையான அரசுப் புறம்போக்கு நிலங்கள் அதிகளவு உள்ளன. எனவே கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டும், அவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு ஏதுவாகவும் கீர னூரில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நடப்பு நிதி யாண்டிலேயே தொடங்குவதற்கு தாங்கள் அவசர நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.