திருச்சிராப்பள்ளி, மே 12-
திருச்சி புறநகர் மாவட்டம் சமயபுரம் எஸ்.கள்ளுக்குடி பகுதியில் பல ஆண்டு களாக குறைந்த மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மின்சார பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும் மின் சாதனங்களை பயன்படுத்த முடி யாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வரு கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கா ததை கண்டித்தும், குறைந்த மின்னழுத் தத்தை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு பகுதிக்குழு தலை மையில் அப்பகுதி பொதுமக்கள் சமயபுரம் மின்வாரிய அலுவலகத்தில் வெள்ளியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பி னர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சந்தி ரன், ஒன்றியச் செயலாளர் கனகராஜ் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கள்ளுக்குடி பொதுமக்களின் கோரிக்கை அடிப்படையில் தக்க மதிப்பீடு செய்து ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் மின்னழுத்தம் சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.