கும்பகோணம், மார்ச் 15- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் ஊழியர் களுக்கும், மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த ஓஎச்டி ஆபரேட்டர் களை பணி நிரந்தரம் செய்தும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைப் படி ஊதியம் மற்றும் ஊதிய நிலு வைகளை வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரி யும் துப்புரவுத் தொழிலாளர் களுக்கு அரசாணைப்படி ரூ.5600 ஊதியம் வழங்க வேண்டும். 2000 ஆம் வருடத்திற்கு முன் பணிய மர்த்தப்பட்ட துப்புரவுத் தொழி லாளர்களுக்கு அரசாணைப்படி மாத ஊதியம் ரூ.6860 வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் ஓஎச்டி துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண் டும். தூய்மைப் பணியாளர் களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். சம்பளத்துடன்கூடிய வார விடுமுறை வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பி.ஜேசுதாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநிலச் செயலா ளர் சி.ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் சா.ஜீவபாரதி, என்.பி.நாகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பக்கிரி சாமி ஆகியோர் விளக்க உரை யாற்றினர். துப்புரவுப் பணியாளர்கள், ஓஎச்டி ஆபரேட்டர்கள், உள்ளாட் சித் துறை ஊழியர் சங்க நிர்வாகி கள் பலர் கலந்து கொண்டனர்.