districts

டாம்கோ திட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடனுதவி

திருச்சிராப்பள்ளி, ஜூலை 4 - திருச்சி மாவட்டத்திற்கு 2022- 2023 ஆம் ஆண்டிற்கான சிறுபான்மை இன  மக்கள் பயனடையும் வகையில் தமிழ் நாடு சிறுபான்மையினர் பொருளாதார  மேம்பாட்டுக் கழகம் மூலம் ரூ.4.55  கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப் புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ்  பயன்பெற குடும்ப ஆண்டு வருமா னம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருத்தல்  வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000, திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலை ஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சத வீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி  விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ. 10,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது.  சுய உதவிக் குழு கடன் நபர் ஒரு வருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சத வீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப் படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சத வீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவ ருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படு கிறது. மேலும் சிறுபான்மை மாணவ,  மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப் பட்ட கல்வி நிலையங்களில் இளங் கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர் களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ்  ரூ.20,00,000 வரை 3 சதவீத வட்டி  விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாண வர்களுக்கு 8 சதவீத மாணவி யர்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில்  ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனு தவி வழங்கப்படுகிறது.

எனவே, மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த,  பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான் மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடன்  மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற் கான சான்று, ஆதார் அட்டை, வரு மான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட  அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்கு வரத்து வாகனங்கள் கடன் பெறுவதற் காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டு றவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  கல்வி கடனுக்கு விண்ணப்பிக் கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ்,  கல்வி கட்ட ணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய  ஆவணங்களின் ஒளிப்பட நகல்களை யும் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மை யின மக்கள் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று பயனடையுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்  தெரிவித்துள்ளார்.

;