தஞ்சாவூர், ஜன.17- தஞ்சாவூரில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பில், தஞ்சாவூர், நாகை, திரு வாரூர், மயிலாடுதுறை ஆகிய ஒருங்கி ணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 40 ஆண்டு கால படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள், இசைக் கலைஞர் கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், திரைக் கலைஞர்கள், ஊடகத்தினர் என ஏறத்தாழ 750 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை முனைவர் கண்ணன் அடிகள் துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன் உரையாற்றினார். படைப்பாளர்கள், கலை, இலக்கிய ஆர்வ லர்கள், இசைக் கலைஞர்கள், வயது முதிர்ந்த தமிழறிஞர்கள், திரைக் கலைஞர்கள் ஆகி யோர் தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வையொட்டி, புகைப்படம் மற்றும் புத்தகக் கண்காட்சியும் நடை பெற்றது. இதில், 20 - 30 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட படைப்பாளர்களின் பழைய புகைப் படங்கள், சிறப்பு விருந்தினர்களுடனான புகைப்படங்கள், எழுத்தாளர்கள் வெளி யிட்ட நூல்களில் சில போன்றவை காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். ராமநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பேசினர்.