பாபநாசம், ஏப்.30-
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சுவாமி மலை முருகன் கோவிலில் முதியவர்கள், உடல் நலக் குறைவுள்ள பக்தர்கள் சிரமின்றி தரிசனம் செய்ய லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா சட்டமன்றத்திலும், முதல மைச்சர், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிட மும் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், சட்டமன்ற கூட்டத் தொடரில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக் கையின் போது, சுவாமிமலை முருகன் கோயிலில் பக்தர் களின் வசதிக்காக ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் லிப்ட் அமைக் கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதற்கான தொடர் முயற்சிகளை மேற்கொண்ட பாப நாசம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல் லாவை கும்பகோணம் மருத்துவர் ஆனந்த குமார் உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர், அப் போது மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தஞ்சாவூர் பாதுஷா, மாவட்டத் தலைவர் ஹிபாயத்துல்லா, தலைமைச் செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரிபாயி உட்பட உடனிருந்தனர்.