புதுக்கோட்டை, ஏப்.27-
புதுக்கோட்டை காந்திநகரைச் சேர்ந்தவர் ரங்கன் மகன் ரவி (56). தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும், வடக்கு இம்மனாம்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் சுந்தரம் (44) என்பவரும் நண்பர்கள்.
கடந்த 2019 ஆகஸ்ட் 4 அன்று கீழ 3ஆம் வீதியில் பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் நின்று கொண்டி ருந்த ரவியிடம், அங்கு வந்த சுந்தரம் மது அருந்து வதற்கு பணம் கேட்டுள்ளார்.
வேலைக்குப் போகாமல் ஏன் ஊர் சுற்றிக் கொண்டி ருக்கிறாய் என ரவி கேட்டாராம். இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் ஆத்திரமடைந்த சுந்தரம், ரவியை சாதியைச் சொல்லி திட்டியதுடன் தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ரவி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பல னின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த கணேஷ் நகர் காவல்துறையினர், குற்றவாளி சுந்த ரத்தைக் கைது செய்தனர்.
இவ்வழக்கு புதுக்கோட்டை மாவட்ட வன்கொடு மைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சத்யா, சுந்த ரத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2.50 லட்சம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். இதில் அபராதமாகப் பெறப்படும் ரூ.2.50 லட்சத்தை பாதிக்கப் பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.