districts

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் 6 அறிஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

புதுக்கோட்டை, ஜூலை 24-

     6 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில், புதுக்கோட்டையைச் சேர்ந்த 6 அறிஞர்களுக்கு வாழ்நாள்  சாதனையாளர்கள் விருது வழங் கப்படவுள்ளது. இதுகுறித்து புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருப்பதாவது:

     புதுக்கோட்டை மாவட்ட நிர்வாக மும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும்  இணைந்து 6 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை 2023 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்துகின்றன.

    மாநிலத்தின் முக்கிய பதிப்பகங் கள், நூறு அரங்குகளில் ஆயிரக்க ணக்கான தலைப்புகளில், லட்சக்க ணக்கான நூல்களை இத்திருவிழாவில்  காட்சிப்படுத்த உள்ளனர். புத்தக விற்ப னையில் ரூ.2 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

காலை அமர்வுகள்

     தினமும் காலை 10 முதல் மாலை 4  மணி வரை பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன. எளிய அறிவியல் பரி சோதனைகள், அறிவியல் விளை யாட்டுகள் இதில் இடம்பெறுகின்றன. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி வாகனம் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்  கப்படவுள்ளது. மேலும், கோளரங்கம்  அமைக்கப்படவுள்ளது. தொலை நோக்கி மூலம் வான் நோக்குதல்  நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டுள் ளன.

வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

     புதுக்கோட்டை ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி, வரலாற்று ஆய்வா ளர் ஜெ.ராஜாமுகமது, தொல்லியல் ஆய்வாளர் கரு.ராசேந்திரன், மூத்த  எழுத்தாளர் செம்பை மணவாளன், மூத்த தமிழறிஞர் துரை.மதிவாணன்,  மூத்த எழுத்தாளர் ப.உமாபதி ஆகி யோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி ஆகஸ்ட் 5 அன்று வழங்குகிறார்.

விழிப்புணர்வு நிகழ்வுகள்

    புத்தகத் திருவிழா குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில், ஜூலை  25 அன்று காலை 10 மணிக்கு புதுக்  கோட்டை பொது அலுவலக வளா கத்தில் இருந்து நகர்மன்றம் நோக்கி புத்தகத் திருவிழா விழிப்புணர்வுப் பேரணி நடைபெறவுள்ளது. பேரணி யை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி  ரம்யா தொடங்கி வைக்கிறார். இதே போல, அனைத்து ஒன்றியத் தலைமை யிடங்களிலும் விழிப்புணர்வு பேரணி கள் நடத்தப்படுகின்றன.  

ஞாயிறு சிறப்புப் போட்டிகள்

     ஜூலை 30 அன்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சதுரங்கப்  போட்டியும், ஆக. 6 அன்று 1 முதல் 5 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் நடைபெறவுள் ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ள னர்.