எல்.ஐ.சி.யின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்க துடிக்கும் ஒன்றிய மோடி அரசின் முடிவை கண்டித்து நாடு முழுவதும் எல்.ஐ.சி.யில் பணியாற்றும் ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள், பாலிசிதாரர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். தஞ்சையில் நடந்த போராட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் தஞ்சைக் கிளை செயலாளர் செ.இராஜன் தலைமை வகித்தார். பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மதுரை மண்டல துணைத் தலைவர் ப.சத்தியநாதன் கண்டன உரையாற்றினார்.