districts

img

எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் பரப்புரை வாகனத்தை திருச்சி ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 18- பொதுப் பள்ளிகளில் கற்றல் மற்றும்  கற்பித்தலில் குழந்தைகளிடமும் ஆசிரி யர்களிடமும் ஏற்பட்டுள்ள கற்றல் இனிமை குறித்த தாக்கத்தை பொது மக்களிடம் முக்கியமாக பெற்றோர்களிடமும் கொண்டு செல்ல “எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்” என்ற மாவட்டம் தழுவிய பரப்புரை நிகழ்வு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பரப்புரைவாகனம் கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை கடந்து  புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 20ஆம்  தேதியன்று பரப்புரையை நிறைவு செய்கி றது இதைத் தொடர்ந்து இரண்டாம் நிகழ்  வாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2 மற்றும் 3-ஆம்  வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கிடையே ஊக்கத்தையும் ஆசிரியர்கள்- பெற்றோர் களுக்கிடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் பள்ளிகளுக்கு பெற்றோர்களை வரவழைத்து அவர்களி டம் எண்ணும் எழுத்தும் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளை செயல்பாடுகள் மூலம் விளக்கும் நிகழ்வு, மார்ச் 20 மற்றும்  21 ஆகிய தேதிகளில் அரசு மற்றும் அரசு  உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.  இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலு வலர் பாலமுரளி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.