நாகர்கோவில், ஏப்.19- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும், விள வங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றும் மக்களை பிரித்தாளும் பாஜகவுக்கு இந்த தேர்தலில் பாடம் புகட்டப்படும் என்றும் அமைச்சர் த.மனோ தங்கராஜ் கூறினார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கிள்ளியூர் தொகுதிக்கு உள்பட்ட மூசாரி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி யில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தார். அதன் பிறகு அமைச்சர் செய்தியாளர்களி டம் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை சூழ்ந்திருக்கும் இருள் அக லட்டும். உதயசூரியன் உதிக்கட்டும். இந்தியா விலுள்ள மக்களை மதத்தின் பெயரால் பிரித்தாளுகின்ற பாஜகவை வீட்டிற்கு அனுப்பும் ஒரு மிகப்பெரிய அதிகாரம் மக்களி டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் என்ன செய்தோம் என்பதை சொல்வதற்கு எதுவும் இல்லாமல் மக்களை வேறுபடுத்தி அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடும் ஒன்றிய பாஜக அரசுக்கு இந்த தேர்தல் தகுந்த பாடம் புகட்டும். தமிழகம், புதுவை உள்பட 40 தொகு திகளையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும் என்றார்.