districts

img

அறிவியல் பார்வையில் இயற்கையை அறிவோம்!

ஈரோடு, மே 5- அறிவியல் பார்வையில் இயற் கையை அறிவோம் என்ற தலைப்பில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில், மேற்கு மண்டல கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம், கோபி அருகே ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா கலைக்கல்லூரியில், “அறிவியல் பார் வையில் இயற்கையை அறிவோம்” என்ற தலைப்பின் அடிப்படையில் சூழ லியல் அறிவியல் குறித்து இரண்டு நாள்  கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அருவி லேகியம் செயலாளர் மெகர னிஷா தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் முரளி கார்த்திக் வரவேற் றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் முகமது பாஷா வாழ்த்துரை வழங்கினார். இக்க ருத்தரங்கில் பல்வேறு கருத்தாளர்கள்  உரையாற்றினர். மேற்கு மண்டலத்தை  சேர்ந்த எட்டு மாவட்ட தன்னார்வலர் கள் கலந்து கொண்ட கருத்தரங்கினை,  அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செய லாளர் ராமமூர்த்தி ஒருங்கிணைத்தார்.