மயிலாடுதுறை/தஞ்சாவூர், ஆக.5 - மயிலாடுதுறை மற்றும் தஞ்சா வூர் மாவட்டங்களில் பள்ளி மாண வர்களுக்கு விலையில்லா மிதி வண்டி வழங்கும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தூய தெரசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் 6254 மாணவ, மாணவி களுக்கு ரூ.3.1 கோடி0 மதிப்பீட்டி லான மிதிவண்டிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தரங்கம்பாடி தூய தெரசா மேல்நிலைப்பள்ளி, டிஇஎல்சி பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளி, பொறையார் தவசமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் களுக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தரங் கம்பாடி மண்ணில், தொடக்கத்தில் சிறுபான்மை மக்கள்தான் கல்விக் காக நூற்றாண்டுகளை கடந்து முக்கிய பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளி 1493 மாணவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 10, 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் கிட்டத்தட்ட அதிக மதிப்பெண் பெற்று இப்பள்ளி உள்ளது. நமது மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கிற வகையில் இப் பள்ளி செயல்பட்டு கொண்டிருக் கிறது. அதற்காக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகள். கல்வி என்பது மிக முக்கிய மான ஒன்று. ஒரு காலத்தில் படித்த வர்கள் படிக்காதவர்களை பார்த்து படியுங்கள் எனக் கூறி கொண்டிருப் போம். ஆனால், தற்போது அனை வரும் படித்தவர்களாக மாறி விட்ட னர். எந்த ஒரு அரசு பதவியோ அல்லது வேறு எந்த ஒரு நிலையை அடைய வேண்டும் என்றால், நாம் தொடர்ந்து புத்தகங்களை, நூல் களை படிக்க வேண்டும். நம் அறிவுத் திறனை அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் தொடர்ந்து வெற்றியா ளர்களாக உருவாக முடியும். இந்த மண்ணில் சாதனையாளர்களாக திகழ முடியும். நமது முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, கல்வித்துறையில் பல்வேறு சாதனைகளை நிறை வேற்றி உள்ளார். கல்வி என்பது கடினமாக இருந்தாலும், அதை கற்று வரும்போது மிக எளிதாகி விடும். நாம் பிளாஸ்டிக் உபயோகிப் பதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும். பிளாஸ்டிக் மனிதகுலத் திற்கு மட்டுமல்ல இயற்கைக்கே எதி ரானது. அதற்காக முதலமைச்சர், மீண்டும் மஞ்சப்பை என்ற மகத் தான திட்டத்தை உருவாக்கி உள்ளார். அதை நாம் பயன்படுத்த வேண்டும். தூய்மையாக வைத்திருக் கும் பள்ளி, கல்லூரிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சமும், 2 ஆவது பரிசாக ரூ.5 லட்சம், 3 ஆவது பரிசாக ரூ.3 லட்சம் என வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். தொடர்ந்து, பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின்கீழ் மாணவ, மாணவி களுக்கு மஞ்சப்பைகளை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வழங்கினார். பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டி கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 107 பேருக்கு விலையில்லா மிதிவண்டி களை வழங்கி சிறப்புரையாற்றினார். பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் 86 பேருக்கும், அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவிகள் 439 பேருக்கும் விலையில்லா மிதிவண்டி களை சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் வழங்கினார்.