திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்தில் மருங்காபுரி வட்ட குழுவின் சார்பில் தோழர் லெனின் நூற்றாண்டு பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டச் செயலாளர் தியாகராஜன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிதம்பரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வட்டக்குழு மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.