districts

img

பாலஸ்தீன போரை உடனே நிறுத்த வேண்டும்

தஞ்சாவூர், நவ.24-  பாலஸ்தீன நாட்டின் மீது போர் தொடுத்து பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலை கண்டித் தும், உடனடியாக போரை நிறுத்தம் செய்யக் கோரியும் இடதுசாரி அமைப்பு கள் சார்பில் பிரச்சார இயக்கம் நடை பெற்றது. தஞ்சாவூர் ரயிலடியில் வியாழக் கிழமை மாலை நடைபெற்ற பிரச்சார  இயக்கத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, இந்திய கம்யூனி ஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்தி ராபதி, சிபிஐ (எம்எல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் டி.கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பிரச்சார இயக்கத்தில் சிஐடியு மாநி லச் செயலாளர் சி.ஜெயபால், சிபிஎம் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம்.இளங்கோவன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே. அன்பு, ஆட்டோ சங்க மாநகரச் செய லாளர் ராஜா மற்றும் இடதுசாரிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.