திருத்துறைப்பூண்டி, ஆக.2 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிக் கட்சிகள் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட் டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு நடை பெற்ற மறியல் போராட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வரும் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப் பினருமான கோ.பழனிச்சாமி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் ஆகி யோர் தலைமை வகித்தனர். திருத்து றைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க. மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். வேதாரண்யம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யத்தை அடுத்த தகட்டூர் அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற போராட் டத்தில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, வேதை தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.அம்பிகாபதி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வெற்றி யழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.