districts

img

பிற கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைவு

கும்பகோணம்,  செப்.3 - பிற கட்சிகளிலிருந்து விலகிய பத்து பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியத்தில் ஏனநல்லூரில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை முன்னிலையில், ஏனநல்லூர் கிளைச் செயலாளர் மதிமாறன் தலைமையில் பிற கட்சிகளிலிருந்து விலகிய மாதாமணி, பாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், மகாலிங்கம், காசிராமன், சங்கர், ராம்ஜி, ஐயப்பன், கலையரசன், முரசொலிமாறன் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சி.ஜெயபால், ஒன்றிய குழு செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.