districts

img

தோழர் எஸ்.பன்னீர்செல்வத்திற்கு இறுதி அஞ்சலி

தீக்கதிர் திருச்சிப் பதிப்பு பொது மேலாளர் தோழர் எஸ்.பன்னீர் செல்வம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி பேசினார். முன்னதாக தோழர் பன்னீர்செல்வம் உடலுக்கு திமுக குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், சிபிஐ முன்னாள் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் செல்வராஜ், திருச்சி மாவட்டச் செயலாளர் சுரேஷ், இந்திரஜித், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் மற்றும் அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள், திருச்சி பெல் சிஐடியு சங்கத் தலைவர்கள், மின் வாரிய சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாதர் சங்கத்தினர் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.


தீக்கதிர் அனைத்துப் பதிப்பு ஊழியர்கள் சார்பில் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம்,  முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி உள்ளிட்டோர் அஞ்சலி


தீக்கதிர் திருச்சிப் பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி.நாகராஜன் மற்றும் செய்தியாளர்கள் அஞ்சலி.


மூத்தத் தலைவர்கள் எஸ்.திருநாவுக்கரசு, சி.கல்யாணசுந்தரம், மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா உள்ளிட்டோர் அஞ்சலி.


சிபிஎம் திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக்குழுக்கள்,  


தீக்கதிர் திருச்சிப் பதிப்பு ஊழியர்கள் சார்பில் அஞ்சலி.