districts

img

மறமடக்கி கல்குளத்தில் குறுவாள், குறியீட்டுடன் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை, ஏப்.18-

   புதுக்கோட்டை மாவட்டம் மற மடக்கியில் உள்ள கல்குளத்தில் வீரன் புதைக்கப்பட்டதற்கு அடை யாளமாக குறுவாள், குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

   புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தாலுகாவில் உள்ளது கல்குளம். இக்குளத்தில் தற்பொ ழுது மராமத்துப் பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. மராமத்துப்  பணியின் போது வீரன் புதைக்கப் பட்டதற்கான அடையாளமான குறு வாள், குறியீட்டுடன் கூடிய பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   இந்தக் குளம் வில்லுனி ஆற்றங் கரையின் தொடக்கப் புள்ளியாக  உள்ளது. மராமத்துப் பணியின் போது பழமையான கல்வட்டம் காணப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பணிநிறுத்தப்பட்டு புதுக்கோட்டை தொல்லியல் கழகத்தினருக்கு தெரி விக்கப்பட்டது. தொல்லியல் ஆய்வா ளர் ஆ.மணிகண்டன் தெரிவித்ததா வது:

   இங்கு கருப்பு சிவப்பு பானை ஓடு களும், தாழியின் உடைந்த அமைப்பு களும், சுண்ணாம்பு கற்கள் கலைந்த  களிமண்ணில் இவை புதை யுண்டு இருப்பதையும் காணமுடிந் தது. கல்வட்டத்தின் மையத்தில்  இருந்த தாழி அமைப்பில் வைக்கப் பட்டிருந்த சிறு மட்பாண்டங்கள், குறு வாள் ஆகியவை வெளிப்பட்டிருந் ததையும், அந்தக் குறியீட்டில் ஒரு வீரன் புதைக்கப்பட்டிருக்கிறான் என் பதை வெளிப்படுத்தும் வகையில் கூம்பு வடிவில் மூன்று கூடுகள் வரையப்பட்டுள்ளது.  

   இந்த கல்வட்டங்கள் ஏற்கனவே தொல்லியல் ஆய்வாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த போதி லும் கல்வட்டத்தின் உட்பகுதியில்  தாழி அமைப்பில் வைக்கப்பட்டி ருந்த குறுவாள், பானைக்குறியீடு கள் உள்ளிட்ட பொருட்கள் தற்போது  அடையா ளப்படுத்தப்பட்டிருக் கிறது. மேலும் இப்பகுதியில் இரும்பு  உருக்குப் பணி நடந்ததற்கான அடை யாளங்களும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்தப் புதிய பொருட்கள் இரும்புக் காலத்தின் மிக முக்கியச் சான்றாக இருக்கும் என்றார்.