தஞ்சாவூர், ஆக.2 -
கல்விக்கான இயக்கங்களின் கூட்ட மைப்பின் அறைகூவலை ஏற்று, அகில இந்திய அளவில் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் செவ்வாய்க்கிழமை வாயில் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ திரும்பப் பெற வேண்டும். பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் - அரசு ஊழியர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் கிளைத் தலைவர் பேராசிரியர் வெ.சுகுமாரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி உட்பட அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் பேரா சிரியர்கள் வாயில் முழக்கப் போராட் டத்தை நடத்தினர்.