திருவள்ளூர்,மே 11-
மக்களின் அடிப்படையான கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தியதால், கட்சி தலைவர்கள் மீது பொய் வழக்கு போட்ட கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தியை பணி நீக்கம் செய்ய கோரி வியாழனன்று (மே 11) சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் வெகுஜனஅமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள பாத்தப்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சாய்குமார் மற்றும் கண்ணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் தங்கள் நிலங் களை அளவீடு செய்ய வேண்டும் என முறையாக கட்டணம் செலுத்தி ரசீது பெற்று ள்ளனர். நிலத்தை அளவீடு செய்யாமல் கடந்த 9 மாதங்களாக காலதாமதம் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏப்.10 அன்று சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள் தலைமையில் சென்றவர்கள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தியை சந்தித்து நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அப்போது வட்டாட்சியர் ” நீங்கள் சொன்னால் நாங்கள் உடனடியாக செய்யணுமா, போய் போராட்டம் நடத்துங்கள் கவலையில்லை” என அடாவடியாக பேசியுள்ளார். பின்னர் வேலை பளு காரணமாக கோபத்தில் பேசி யதாக கூறிய அவர், 11 நாட்கள் கழித்து (ஏப்.22) கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையத்தில் சிபிஐ மாவட்ட துணைச் செய லாளர் ஜெ.அருள், வழக்கறிஞர் ஆனந்தன், சட்ட கல்லூரி மாணவர் நந்திவர்மன், சமூக ஆர்வலர் சக்தி ஆகியோர் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.
பெருக்கெடுத்து ஓடும்
லஞ்சம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவல கத்தில் பட்டா மாறுதல் செய்ய தற்போது வரை தரகர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெறப்படுகிறது. சட்ட விரோதமாக சவுடுமண் கடத்தப்படுகிறது, நூற்றுக்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் சட்ட விரோத மாக இயக்கப்படுகிறது, மேல்முதலம்பேடு, ஈகுவார்பாளையம், தேக்கமூர் ஆகிய ஊராட்சிகளில் அரசு நிலத்தை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவர்கள் மீது வட்டாட்சியர் எந்த வழக்கும் போடுவதில்லை. முதியோர் உதவித் தொகை, சான்றிதழ்கள் கேட்டு வரும் அப்பாவி மக்களை மட்டும் மிரட்டும் போக்கு உள்ளது. மனு செய்து 30 நாட்களுக்குள் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும், இல்லையெனில் சம்மந்தப்பட்ட அதிகாரி கள் ரூ.25 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவல கம் முன்பு வியாழனன்று (மே.11) நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பி னர் ஜி.சூரியபிரகாஷ் தலைமை தாங்கி னார்.
இதில் சிபிஎம்வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் சங்கத் தின் செயலாளர் ஏ.எம்.சேகர், காங்கிரஸ் கட்சி யின் மாநில செயலாளர் வழக்கறிஞர் எம்.சம்பத், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில இணை செயலாளர் கே.எம்.விகேந்தர், சிபிஐ ஒன்றிய செய லாளர் என்.ராஜேஷ், வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ப.லோகநாதன், சிஐடியு மாவட்ட நிர்வாகி டி.கோபால கிருஷ்ணன் ஆகியோர் அதிகாரி பிரீத்தி யின் அணுகுமுறையை கண்டித்து பேசி னர்.