கும்பகோணம், ஏப்.29-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் துளசி பார்மசி இந்தியா பிரை வேட் லிமிடெட் இணைந்து போக்குவரத்து கழக பணியா ளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமினை மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோ கன் தொடங்கி வைத்தார். முகாமில் கண் தொடர்பான பரிசோ தனைகளும், செவித்திறன் தொடர்பான குறைபாடுகள் கண்ட றிதல், இரத்த அழுத்த பரிசோதனை, உடல் எடை கண்டறி தல், சர்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தேவையான ஆலோசனை களும் மேல்சிகிச்சைகான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.
முகாமில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், தொழில்நுட்ப பணி யாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், அலுவலர் கள் உள்ளிட்ட 250 நபர்கள் பங்கேற்றனர். மேல் சிகிச்சை தேவைபடுபவர்களுக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உரிய உயரிய சிகிச்சைகள் வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முகாமில் பொது மேலாளர்கள் ஜே.ஜெபராஜ்நவமணி, கே.முகமது நாசர், முதுநிலை துணைமேலாளர் கே.டி.கோவிந்தராஜன், துணை மேலாளர் எஸ்.ராஜா, உதவி மேலாளர்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.ரமேஷ், கே.நாகமுத்து, என்.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.