பாபநாசம், நவ.24 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட்டின் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்திலிருந்து ரூ.8.50 லட்சத்தில் பாபநாசம் அரசு மருத்துவ மனைக்கு செமி ஆட்டோ அனலைசர், செல் கவுண்டர், ஈ.சி.ஜி மெஷின், ஆபரேஷன் தியேட்டர் கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மக்களவை உறுப்பினரும், கும்பகோ ணம் பரஸ்பர சகாயநிதி லிமிடெட் தலைவருமான கல்யாணசுந்தரம் மருத்துவ உபகரணங்களை வழங்கிப் பேசினார். பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல், மருத்துவர்கள் ஹேமாவதி, கவிதா, செவிலியர் கண்கா ணிப்பாளர் பவுலின் மேரி, செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பாபநாசம் பேரூராட்சித் தலைவி பூங்குழலி, பேரூராட்சி கவுன்சி லர்கள் பிரகாஷ், ஜாபர் அலி, பெருமாள் கோயில் ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.